Krishna Karnamrudham

கிருஷ்ண கர்ணாம்ருதம் என்பது கண்ணனின் சிறுவயது லீலைகளைச் சொல்லும் ஸ்லோகங்கள், கதைகள். ஸ்ரீ பில்வமங்கலம் என்னும் ஸ்வாமி ஸ்ரீமத் பாகவதத்தை தழுவி 328 ஸ்லோகங்களை அருளினார். இவற்றின் சில கதைகளை இங்கே காணலாம். (Both Tamil and English)

‘Sree Krishna Karnamrutham‘ is a work in Sanskrit by the poet Shri Bilvamangala Swami and he composed 328 slokaas in this masterwork. He acquired the name ‘Leelasukar’ because of his becoming immersed in the Leela of Krishna!


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 1 – ஸ்ரீ லீலா சுகர் அருளியது யசோதை குழந்தை கிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தூங்க வைக்க முயல்கிறாள்; எந்தக் குழந்தைக்குத் தான் கதை கேட்க ஆசை இருக்காது? கிருஷ்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா? “கதை சொல்லு,” என முரண்டு பிடிக்கும் தன் சுட்டிக் குட்டனுக்கு ஒரு கதை சொல்கிறாள் அன்னை யசோதை: யசோதை: “ராமன் என்று ஒருவர் இருந்தாராம்.” கிருஷ்ணன்: “ஊம்” யசோதை: “அவருக்கு சீதை என்று ஒரு மனைவி இருந்தாளாம்.” கிருஷ்ணன்: “ஊம்.” யசோதை: “தகப்பனார் […]

“ஹே! லக்ஷ்மணா, எங்கே என்னுடைய வில்? ” என்று கேட்ட கிருஷ்ணன்!


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் 2 யசோதையிடம் கதை கேட்ட குழந்தை கிருஷ்ணன் ஆயர்பாடியில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறான். பக்கத்தில் அன்னை யசோதையும் சிறிது கண்ணயர்ந்திருக்கிறாள். திடீரென்று கிருஷ்ணன் யாரையெல்லாமோ தடபுடலாக வரவேற்கிறான். பெரிய மஹாராஜா போன்று குழந்தையான அவன் உபசரிப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. “சம்புவே! வருக, வருக! தங்கள் வரவு நல்வரவாகட்டும்; இங்கே வந்து உட்காருங்கள். பிரம்மாவே, வாருங்கள், இப்படி என் இடது பக்கத்தில் உட்காரலாமே! கிரவுஞ்ச மலையை அழித்தவனே, சுப்ரமண்யனே, சௌக்கியமா? தேவேந்திரனே, உம்மைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டனவே,” எனத் தூக்கத்தில் […]

உறக்கத்திலே உபசரிக்கும் கிருஷ்ணன்


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 3 யசோதையிடம் தினமும் கிருஷ்ணனை பற்றி கோபிகைகள் புகார் சொல்வது பழக்கமாகிவிட்டது. அதாவது இந்த குழந்தை ‘வெண்ணெய் திருடினான்’; ‘தயிரைத் திருடித் தின்றான்’; ‘கன்றுகளை அவிழ்த்துவிட்டான்’. இது போல பல புகார்கள். அதற்கேற்றாற்போல் இந்த பாலகன் செய்வதைப் பாருங்கள். கிருஷ்ணன் வெண்ணெய் எடுக்கும்போது திடீரென்று கோபி வந்து விட்டாள். எப்படி சமாளிக்கிறான் அவன்! கோபிகா: “குழந்தாய்! நீ யார்?” கிருஷ்ணன்: “நான் பலராமனின் இளைய சகோதரன்.” கோபிகா:“நீ எங்கு வந்தாய்?” கிருஷ்ணன்:“என் வீடு என்று நினைத்து வந்துவிட்டேன்” கோபிகா: […]

பானைக்குள் கன்றைத் தேடிய கண்ணன்!


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் 4 “பொழுது புலர்ந்தது நீயும் கண்மலராய்! கருமணிக் குட்டனே! தொழுதேன் உன் திருவடியை, நீ பல்லாண்டு வாழ்க” என்று பாடி கண்ணனை எழுப்பினாள் யசோதை. துயில் நீங்கி எழுந்து விளையாடுகின்றான் குழந்தை கிருஷ்ணன். அவன் வளரும் ஆயர்பாடியில் எல்லாருக்கும் அவன் மீது கொள்ளைப் பிரியம். பாலையும் தயிரையும் வெண்ணையையு ம் அவன் இஷ்டப்படி எல்லார் வீடுகளிலும் புகுந்து தின்று மகிழ்கிறான். தெருவில் ஒரு அழகுக் காட்சி காண்பவரை மெய்மறக்க வைக்கின்றது. இடைப் பெண் ஒருத்தி தெருவில் தயிர், பால் இவற்றைப் […]

“கோவிந்தா, தாமோதரா, மாதவா” எனக் கூவி கண்ணனையே விற்கும் பெண்!



ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 5 – லீலாசுகர் அருளிச்செய்தது பாலையும் தயிரையும் உண்ட கண்ணனுக்கு வெண்ணெய் தின்ன ஆவல். அவன் யசோதாவை அழைக்கின்றான். யசோதை: “எதற்குக் கூப்பிட்டாயடா, கண்ணா?” கிருஷ்ணன்: “எனக்கொரு பாத்திரம் வேண்டும்” யசோதை:’எதற்கடா, பாத்திரம்?’ கிருஷ்ணன்: ‘பால் நிரப்பிப் பருகவேண்டும்’ (வேறு எதற்கு? வெண்ணெய் திருடத்தான்!) யசோதை:’பாலெல்லாம் இப்போது அருந்தக் கூடாது, இராத்திரிதான், பால்’ கிருஷ்ணன்:’இராத்திரி என்றால் என்ன, அம்மா?’ யசோதை: ‘இருட்டு, தெரியுமில்லையா? ஒன்றும் தெரியாதிருக்கும் அந்த இருட்டுதான் இராத்திரி’ கண்ணை இறுக்க மூடிக் கொண்ட கண்ணன். “இதோ, […]

விழிகள் உறக்கி வட்டில் வேண்டிய விமலன்


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 6 — கிருஷ்ணனுக்கும் கோபிக்கும் நடந்த சம்பாஷணை — கோபி: “யாருடைய விரல்கள் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டுகின்றன?” கிருஷ்ணன்: “ஏ பெண்ணே! நான்தான் மாதவன்”. கோபி: என்ன? நீ மாதவன் என்றால் வசந்த ருதுவா? கிருஷ்ணன்: இல்லை. நான் சக்ரதாரி; கோபி: ஓஹோ! அப்படியானல் நீ குயவன் போலுள்ளவன். கிருஷ்ணன்: இல்லை அம்மா! நான் இவ்வுலகைத் தாங்குபவன். கோபி: ஓஹோ! உலகைத் தாங்கும் ஆதிசேஷனோ? கிருஷ்ணன்: இல்லை, இல்லை, நான்தான் கொடிய நாகப்பாம்பை அடக்கியவன்; கோபி: அப்படியானால் […]

குறும்புகள் செய்யும் கிருஷ்ணனையே திணற வைக்கும் கோபி சிறுமி!


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 7 யாசோதா கண்ணனிடம், “கிருஷ்ணா, இங்கே வா” கிருஷ்ணன்: “இதோ வந்தேன். என்ன அம்மா?” யாசோதா: “அந்த தங்க கோப்பையிலிருக்கும் பாலை பருகிவிடு” கிருஷ்ணன்: ” நான் அப்புறம் பருகுவேன்” யாசோதா: “பலராமன் யமுனாயாற்று மணற்குன்றுகளில் விளையாட சென்றுள்ளான்.இப்போதே பருகிவிடு” கிருஷ்ணன்: “ஏன் தாயே?” யாசோதா: “இப்போதே பருகினால்தான் உன் குடுமி முடி விரைவாக வளரும்” கிருஷ்ணன்: “ஓ அப்படியா? உடனேயே பருகுகிறேன்” கிருஷ்ணன் பாதி பாலை அருந்தி விட்டு, தன் குடுமி முடியைத் தொட்டு பார்த்து, மகிழ்ச்சியில், […]

குடுமியைக் கண்டு குதூகலித்த குட்டி கிருஷ்ணன்


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 8 கிருஷ்ணனிடம் கோபியர்கள், ” கிருஷ்ணா, உன் பார்வை கருணையைப் பொழிகின்றன. உன்னுடைய நடை, கம்பீரமாக அழகாக மற்றும் கவர்ச்சிகரமான உள்ளது. உனது பேச்சைக் கேட்பவர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்குவர். உன்னுடைய புன்னகை மூன்று உலகங்களையும் கொள்ளை கொள்ளும் நான் மூன்று உலகங்களில் மிக்க அழகு நிறைந்தவனைப் பார்க்க விரும்புகிறேன். உன்னுடைய முகம் ஒரு புன்னகையுடன், அனைத்திற்கும் அப்பாற்பட்டது. உன்னுடைய திருமேனியின் நீல நிறம் உலகில் அனைத்து இடங்களிலும் பரவியிருக்கிறது. குழலூதி மதுர காண இசையைப் பொழிந்து கொண்டே […]

மூன்று உலகங்களையும் கொள்ளை கொள்ளும் கண்ணனின் புன்னகை



ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 9 ராதா பிருந்தாவனத்தின் ராணி என போற்றப்படுபவள். அவளுடைய நெருக்கமான தோழிகள் லலிதா மற்றும் விசாகா. இன்னொரு பக்கம் பார்த்தால் ‘சந்திரவளி’ என்னும் கோபிகை, அவள் ராதாவின் தங்கை. கிருஷ்ணனை மிகவும் நேசிப்பவள். சந்திரவளி ஸ்ரீமதி ராதாராணியுடன் போட்டியிடுபவள். அவளுக்கும் பல கோபிகை தோழிகள் உள்ளனர். ஒரு சமயம் ராதாவைக் காண கிருஷ்ணன் வந்தான். ராதாவின்அழகான வீட்டை விட்டு வெளியே வரும் சந்திரவளியைப் பார்த்து (அவளை ராதா என்று எண்ணி) கிருஷ்ணன் கேட்டான். “ஏய் ராதா, எப்படி இருக்கிறாய்? […]

சந்திரவளியிடம் வெட்கப்படும் கிருஷ்ணன்!


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 10 ஸ்ரீகிருஷ்ணனின் மனத்தை மயக்கும் இனிய குழலிசையைக் கேட்டு வாயுபகவான் கூட மயங்கி தன் சலனத்தை நிறுத்தினாராம். பசுக்கள் மேய்வதை நிறுத்திவிட்டு அந்த அற்புதமான வேணுகானத்தில் மயங்கி நின்றனவாம். கோபிகைகளின் நிலையோ சொல்லுந்தரமன்று! அவர்களும் அப்படியே நின்ற இடத்திலேயே உறைந்து விட்டார்களாம்! லீலாசுகரும் அந்த இனிமையான வேணுகானத்தில் ஆழ்ந்து மயங்கி இருப்பினும், ஸ்ரீகிருஷ்ணரின் கொவ்வைச் செவ்வாயுடன் தொடர்பு கொள்ளும் எவ்வளவு அதிர்ஷ்டம் கொண்டது இந்த புல்லாங்குழல்! ” யமுனை நதிக்கரையில் வளரும் நளினமான மூங்கிலாகப் பிறக்கும் பாக்கியம் எனக்குக் […]

அந்த புல்லாங்குழலின் பாக்கியம் எனக்குக் கிட்டுமா?


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 11 குழந்தை கிருஷ்ணன் நந்தகோபன் திருமாளிகையில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்; அன்னையும் தாதியரும் சிறிது அசட்டையாக இருந்த நேரம். பளபளக்கும் கண்ணாடி போன்ற தரை; ஆங்காங்கே ரத்தினக் கற்கள் வைத்து இழைக்கப்பட்டது. தவழும் குட்டனின் முகமானது தாமரை மலர் போலப் பளபளக்கும் தரையில் பிரதிபலிக்கின்றது. குழந்தை அதைப் பார்த்துக் களிப்பெய்துகின்றான். ‘இதோ ஒரு தாமரை! அதன் நான் பிடிக்கிறேன்,’ என முயலுகிறான். முடியவில்லை. திரும்பத் திரும்பக் குட்டிக் கைகளால் தரையில் அடித்து, அசைத்துப் பார்த்தும் அத்தாமரையைத் தொடவே முடியவில்லை! […]

தாமரையைப் பிடிக்க முயலும் தாமோதரன்


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 12 ஆயர்பாடியில் காலைப்பொழுது மிக அழகாய் விடிந்து கொண்டிருக்கின்றது. புள்ளினங்கள் கலகலவெனத் தம் இன்னொலிகளை எழுப்புகின்றன. பசுக்கள் கன்றுகளை நாவால் நக்கியபடி கறவைக்குத் தயாராகி விட்டன. மலர்கள் செடிகொடிகளில் விரிந்து நின்றுகொண்டு, “இறைவனின் பூஜைக்கு எம்மைக் கொய்வீராக,” எனத் துடியாகத் துடித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அன்னை யசோதையும் உறங்கிக் கொண்டிருக்கும் தனது செல்லக் குழந்தையைத் துயிலெழுப்புகிறாள்: “குழந்தாய்! கிருஷ்ணா, விழித்துக் கொள்; பொழுது விடிந்து விட்டது பார்! நூறு நூறாண்டுகள் (சரதம் சதம் சதம்) தீர்க்காயுசுடன் வாழ்வாயாக என் […]

சரதம் சதம் சதம் பல்லாண்டு பல்லாண்டு!