Thiruppavai


4
திருப்பாவை தனியன் – ஸ்ரீ பராசர பட்டர் அருளியது நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ்ஸித்தமத்யா பயந்தீ ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்யபுங்க்தே கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய: திருப்பாவை தனியன் – ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளியது அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு * பன்னு திருப்பாவைப் பல்பதியம் * – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை சூடிக்கொடுத்தாளை சொல்லு. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை * பாடியருள்ள வல்ல பல்வளையாய்! * – […]

திருப்பாவை தனியன்


ஸ்ரீ : ஸ்ரீமதே இராமாநுஜாய நம: ஸ்ரீ கோதாயை நம: A Sonnet on திருப்பாவை மாயனுக்குஉகந்த மாஸானாம் மார்க்கசீர்ஷ மார்கழியில் மகிழ்ந்து பகவத – பாகவத கைங்கர்ய நீராட்டத்தில் பரவசமாக்கும் மகிழ்மாலை பரந்தாமன் பறைதருவான் நமக்கேஎன பாரோர் புகழ்ந்து ஆழ்வார்கள் அருளிச்செயலை விஞ்சிநிற்கும் தூய தமிழ்மாலை பொற்றாமரை அடியை போற்றிப்பாடி பரமடி காட்டும் பட்டர்பிரான் கோதை சொன்ன பாரோர் புகழ்மாலை போயபிழை மாயச்செய்து பாதகங்கள் தீர வழி காட்டும் ‘உய்யும்ஆறு எண்ணி’ என அருளி உஜ்ஜீவிக்கும் உய்வுமாலை இன்னிசையால் பாடிக்கொடுத்த பாமாலையால் எங்கும் […]

A Sonnet on திருப்பாவை


7
முதலில் திருப்பாவை தனியன் ஸேவிக்கணும். Go to திருப்பாவை தனியன் திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள் மதி நிறைந்த . . நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்: பாசுரம்மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்நாராயணனே நமக்கே பறை தருவான்!பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்! திருப்பாவை […]

திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள்


திருப்பாவை – பாசுரம் 2 – வையத்து வாழ்வீர்காள்! நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்:  பாசுரம்  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி, நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி, மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம், ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் […]

திருப்பாவை – பாசுரம் 2 – வையத்து வாழ்வீர்காள்



திருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்: ——பாசுரம் – READ —– ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால், தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் […]

திருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த


1
நாடெங்கும் மழை நீரை பெய்யச்செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்: திருப்பாவை பாசுரம் 4 To READ ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல் ஆழியுள்புக்குமுகந்துகொடார்த்தேறி, ஊழிமுதல்வன்உருவம்போல்மெய்கறுத்து பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில் ஆழிபோல்மின்னி, வலம்புரிபோல்நின்றதிர்ந்து, தாழாதேசார்ங்கம்உதைத்தசரமழைபோல் வாழஉலகினில்பெய்திடாய், நாங்களும் மார்கழிநீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய். Thiruppavai pasuram 4 song – Click Play To LISTEN   — விளக்கவுரை—– மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான வருணதேவனே! சிறுதும் ஒளிக்காமல் கடலில் புகுந்துநீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி திருமாலின்திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள்கொண்ட பத்பநாபன்கையில் உள்ளசக்கரம்போல் மின்னலடித்து, அவனுடையசங்கம்போல் அதிர்ந்துமுழங்க உன்னுடைய வில்லாகிய சார்ங்கம் […]

திருப்பாவை பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா


திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு கண்ணனை – தாமோதரனை மலர் தூவி, அவன் நாமங்களை சொல்லி, பாடி துதிப்போம்:  பாசுரம்   – To READ மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய். திருப்பாவை பாசுரம் […]

திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு


1
திருப்பாவை – 6 புள்ளும் சிலம்பின காண்  பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்:   பாசுரம்  – To READ புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு கள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய். திருப்பாவை – 6 […]

திருப்பாவை – 6 புள்ளும் சிலம்பின காண்



திருப்பாவை பாசுரம் 7 – கீசு கீசு என்று பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ? பாசுரம் To READ கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே? காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேசம் உடையாய் திற — ஏலோர் எம்பாவாய். […]

திருப்பாவை பாசுரம் 7 – கீசு கீசு என்று


thiruppavai 8 keelvanam
கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி பாசுரம்   கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடைய பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால், ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.   விளக்கவுரை கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின […]

திருப்பாவை பாசுரம் 8 – கீழ்வானம் வெள்ளென்று


“மாமி, உன் மகள் என்ன மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டாளோ?” ?? பாசுரம் ?? தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய். ?? பாசுர விளக்கம் ?? தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும் மாமன் மகளே! கதவை திறந்துவிடு. […]

திருப்பாவை பாசுரம் 9 – தூமணி மாடத்து


“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே!?” ?? பாசுரம் ?? நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். ?? பாசுர விளக்கம் ?? நோன்பு நோற்றுச் சுவர்க்க உலகம் புகுவேன் என்று சொன்னவளே! வாசல் கதவைத் தான் திறக்கவில்லை; பதிலாவது சொல்லக் […]

திருப்பாவை பாசுரம் 10 – நோற்றுச் சுவர்க்கம்



2
“பெண்ணே! நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?” பாசுரம் கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம்ஒன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வபெண்டாட்டிநீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். திருப்பாவை பாசுரம் 11 பாடல்  பாசுர விளக்கம் இந்த பாசுரத்தில் மற்றொரு கோபிகையை எழுப்ப ஆண்டாள் கோபிகைகளுடன் சேர்ந்து செல்கிறாள். இந்த பெண் மிகுந்த செல்வம் படைத்த […]

திருப்பாவை பாசுரம் 11 கற்றுக் கறவை


விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்? ?? பாசுரம் ?? கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். ?? பாசுர விளக்கம் ?? எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி இரக்கத்துடன் காம்புகள் […]

திருப்பாவை பாசுரம் 12 – கனைத்து இளம் கற்றெருமை


திருப்பாவை பாசுரம் 13 – ‘புள்ளின் வாய் கீண்டானை..’ “நீ உறங்குவது போன்ற உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு எழுந்து வா!” பாசுரம் புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்; வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று; புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் பறவையாய் வந்த பகாசுரனின் வாயைப்பிளந்தவனும் கொடிய […]

திருப்பாவை பாசுரம் 13 – ‘புள்ளின் வாய் கீண்டானை..’


திருப்பாவை பாசுரம் 14 – உங்கள் புழக்கடை “எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது நீ உறங்குவது முறையோ?” பாசுரம் உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் உங்கள் வீட்டு பின்புறக்குளத்தில் செந்தாமரை மலர்கள் மலர்ந்து விட்டன. அல்லி மலர்களின் வாய்கள் மூடிக்கொண்டு […]

திருப்பாவை பாசுரம் 14 – உங்கள் புழக்கடை



திருப்பாவை பாசுரம் 15 – எல்லே! இளங்கிளியே! “எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!” பாசுரம் எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்; வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்; வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக! ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை? எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்; வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை மாயனைப் பாடு — ஏலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் சென்ற […]

திருப்பாவை பாசுரம் 15 – எல்லே! இளங்கிளியே!


திருப்பாவை பாசுரம் 16 – நாயகனாய் நின்ற .. கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்: பாசுரம் நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய், ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் “எங்களுக்கு தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் […]

திருப்பாவை பாசுரம் 16 – நாயகனாய் நின்ற


திருப்பாவை பாசுரம் 17 – அம்பரமே கதவை திறந்ததும் கோபியர் உள்ளே சென்று, நந்த கோபனையும், யசோதையையும், பலராமரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்: பாசுரம் அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் “வஸ்திரங்களையும், தீர்த்தத்தையும், சோற்றையும் தருமமாக அளிக்கின்ற எமக்கு ஸ்வாமியான நந்தகோபாலரே! […]

திருப்பாவை பாசுரம் 17 – அம்பரமே


திருப்பாவை பாசுரம் 18 உந்து மத நந்த கோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்: பாசுரம் உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடைதிறவாய் வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் மத யானையை மோதி தள்ளுகின்ற வலிமையும், போரில் பின் வாங்காத புஜபலத்தை யுடையவமுமான நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! […]

திருப்பாவை பாசுரம் 18 உந்து மத



திருப்பாவை பாசுரம் 19 – குத்து விளக்கெரிய “நப்பின்னையே! க்ஷணகாலமும் நீ கிருஷ்ணனின் பிரிவை சகிக்க மாட்டாயோ? இது தகுமோ?” பாசுரம் குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய் மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் நிலை விளக்குகள் ஒளிவீச, யானைத்தந்தங்களினாற் செய்த கால்களையுடைய கட்டிலிலே அழகு, குளிர்த்தி மென்மை, பரிமளம், […]

திருப்பாவை பாசுரம் 19 – குத்து விளக்கெரிய


Thiruppavai 20
திருப்பாவை பாசுரம் 20 – முப்பத்து மூவர் “பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு!” பாசுரம் முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் முப்பத்து முன்று கோடி தேவர்களுக்குத் துன்பம் வரும் முன்பே சென்று […]

திருப்பாவை பாசுரம் 20 – முப்பத்து மூவர்


திருப்பாவை பாசுரம் 21 – ஏற்ற கலங்கள் “உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக!” பாசுரம் ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண் ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் பொங்கி மேலே வழிய தங்கு தடையில்லாமல் பாலை கொடுக்கும் வள்ளல் போன்ற பசுக்களை […]

திருப்பாவை பாசுரம் 21 – ஏற்ற கலங்கள்


திருப்பாவை பாசுரம் 22 அங்கண்மா ஞாலத்து “கண்ணா! உன் செந்தாமரைக் கண்ணினால் எங்களை நோக்குவாயோ?” பாசுரம் அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய். பாசுர விளக்கம் அழகிய அகன்ற உலகத்து அரசர்கள் அகங்காரம் […]

திருப்பாவை பாசுரம் 22 அங்கண்மா ஞாலத்து



2
திருப்பாவை பாசுரம் 23 ‘மாரி மலை முழைஞ்சில்’ “நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்!” பாசுரம் மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்பு உடைய சீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் மழைக் காலத்தில் மலைக்குகையில் […]

திருப்பாவை பாசுரம் 23 மாரி மலை முழைஞ்சில்


Thiruppavai 24
திருப்பாவை பாசுரம் அன்று இவ்வுலகம் அளந்தாய் “கிருஷ்ணா, நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்” பாசுரம் அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி! சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி! பொன்றக் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி! கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி! குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி! வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி! என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் மஹாபலி […]

திருப்பாவை பாசுரம் 24 அன்று இவ்வுலகம் அளந்தாய்


thiruppavai 25
திருப்பாவை பாசுரம் 25 ஒருத்தி மகனாய் #கோதை_தமிழ்மாலை – வருத்தம் தீர்மாலை “கிருஷ்ணா, நாங்கள் விரும்பியதைத் தந்தருளினால் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம்” பாசுரம் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில் யசோதைக்கு மகனாய் ஒளிந்து […]

திருப்பாவை பாசுரம் 25 ஒருத்தி மகனாய்


Thiruppavai 26
திருப்பாவை பாசுரம் 26 மாலே மணிவண்ணா #கோதை_தமிழ்மாலை – ‘ஆலினிலையான் மாலை’ “மார்கழி நீராட, தேவையான பொருள்களை அளிப்பாயாக!” பாசுரம் மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில் உலகம் நடுங்க ஒலிக்கும் […]

திருப்பாவை பாசுரம் 26 மாலே மணிவண்ணா



thiruppavai 27
திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா #கோதை_தமிழ்மாலை – கூடியிருந்து குளிர் மாலை “நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்” பாசுரம் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே, பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் […]

திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா


thiruppavai 28
திருப்பாவை பாசுரம் 28 – கறவைகள் கோதை_தமிழ்மாலை – ‘பறை தருமாலை’ “சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களைக் கோபிக்காது, எங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வாயாக!” பாசுரம் கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம், அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது; அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவா! நீ தாராய் பறையேலோர் […]

திருப்பாவை பாசுரம் 28 – கறவைகள்


thiruppavai 29
திருப்பாவை பாசுரம் 29 – சிற்றஞ்சிறு காலே “கிருஷ்ணா! உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது பற்று ஏற்படாமல் காப்பாயாக!” பாசுரம் 29 சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து, உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்; பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா; எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்; மற்றை நம் […]

திருப்பாவை பாசுரம் 29 சிற்றஞ்சிறு காலே


Thiruppavai 29
திருப்பாவை 30 – வங்கக் கடல் கடைந்த திருப்பாவை முப்பது பாடல்களையும் பாடுவோர் அடையும் பேரின்பம் பெறுவர். பாசுரம் 30 வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி அங்கப் பறை கொண்ட-ஆற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். பொருள் திருப்பாற்கடலைக் கடைந்த […]

திருப்பாவை 30 வங்கக் கடல் கடைந்த



(திருப்பாவை – 1 ) 1 . நந்தகோபன் குமரன் 2 . யசோதை இளஞ்சிங்கம் 3 . கார்மேனியன் 4 . செங்கண்(ணன்) 5 . கதிர் மதிய முகத்தான் 6 . நாராயணன் (திருப்பாவை – 2 ) 7 . பாற்கடலில் பையத் துயின்றோன் 8 . பரமன் (திருப்பாவை – 3 ) 9 . ஓங்கி உலகளந்தோன் 10 . உத்தமன் (திருப்பாவை – 4 ) 11 . ஆழி மழைக் கண்ணன் 12 . […]

ஸ்ரீ ஆண்டாளின் திருமால் நாமாவளி