கண்ணன் வருகின்ற நேரம்


கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம்

தென்றல் கண்டுகொழித்தது பாரும்

அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென

தரமான குழலிசை கேளும் – போன

ஆவி எல்லாம் கூட மீளும்!

கண்ணன் வருகின்ற நேரம்…

சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் – தென்றல்

தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் – நல்ல

துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென

துள்ளித் துள்ளிக் குதித்தாடும் – புகழ்

சொல்லிச் சொல்லி இசைபாடும்!

கண்ணன் வருகின்ற நேரம்…

கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை – என்று

கண்டதும் வண்டொன்றும் வர்லை

இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே – ஒரு

காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் – எங்கள்

கண்ணன் அன்றி வேறு இல்லேன்!

கண்ணன் வருகின்ற நேரம்…

தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் – என்ன

செளக்கியமோ என்று கேட்கும் – அட

மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ – மாதவனின்

முத்து முடி தனில் சேர்வோம் – அங்கே

மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!

கண்ணன் வருகின்ற நேரம்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *