கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும்
அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
ஆவி எல்லாம் கூட மீளும்!
கண்ணன் வருகின்ற நேரம்…
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் – தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் – நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் – புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!
கண்ணன் வருகின்ற நேரம்…
கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை – என்று
கண்டதும் வண்டொன்றும் வர்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே – ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் – எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
கண்ணன் வருகின்ற நேரம்…
தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் – என்ன
செளக்கியமோ என்று கேட்கும் – அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ – மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் – அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!
கண்ணன் வருகின்ற நேரம்..