திருப்பாவை பாசுரம் 15 – எல்லே! இளங்கிளியே!
“எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!”
பாசுரம்
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்;
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்;
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்;
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு — ஏலோர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்
சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை எழுப்பிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் துயிலில் இருந்து விழித்துக்கொண்ட அப்பெண்ணிடம் ஆண்டாள் உரையாடுவதைக் கேட்போம்.
[ஆண்டாள்] இளங்கிளி போன்றவளே என்னே இன்னமா தூங்குகிறாய் ?
[தோழி] பெண்களே ! இதோ வருகிறேன் ! ‘சில்’ என்று கூச்சலிட்டு எழுப்பாதீர்கள் !
[ஆண்டாள்] நீ வாயாடி. நீ சொல்லும் கட்டுக்கதைகள் முன்னமே நாங்கள் அறிவோமே !
[தோழி] நீங்கள்தான் வாயாடிகள்;பரவாயில்லை; நானே தான் வாயாடியாக இருத்துவிட்டு போகிறேன்
[ஆண்டாள்] நீ உடனே புறப்பட்டு வா! வேறு என்ன வேலை இருக்கிறது ?
[தோழி] எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா ?
[ஆண்டாள்] எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து பெண்களின் எண்ணிக்கையைப் பார்.
குவலயாபீட யானையையும் கம்சன் முதலிய பகைவர்களையும் அழித்த கண்ணனின் புகழ் பாட எழுந்துவா

Thiruppavai Pasuram 15 – Meaning
This verse is in the form of a conversation between the maidens at the threshold of a house the maiden within the house.
Andal: “What is this, Pretty-like damsel! Are you still sleeping ?”
Gopi: “Do not use harsh words!, I am coming”
Andal: “You can talk well; we know it already”
Gopi: ” As it is, you are all strong; doesn’t matter, let me be the one(harsh in speech)”
Andal: “Come quickly and join us”
Gopi: “Has everyone come?”
Andal: “Yes, everyone has come, count for yourself”
“Let us all sing in praise of the Krishna who killed the Kuvalayapida elephant and Kamsa.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்