ஆழ்வார் பாசுரங்களில் ஆசார்ய வைபவம் – ஸ்ரீ எம்பார்
ஒருசமயம் எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியைத் திருவடி தொழுவதற்கென்று அங்கு எழுந்தருளின காலத்தில், சில ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பாரிடம் வந்து “சாயைப்போலப் பாடவல்லர்’ என்ற அடியின் கருத்தை அருளிச் செய்யவேண்டும்” என்று பிரார்த்திக்க, (பெரியாழ்வார் திருமொழி சாற்றுமுறை பாசுரம்)
அதற்கு எம்பார், “எம்பெருமானாரிடத்தில் இதன் பொருளை நான் கேட்டுணர்ந்ததில்லை; இப்போது அவரைக்கேட்டு உங்களுக்குச் சொல்லுவோமென்று பார்த்தால், அவர் திருக்கோட்டியூர்க்கு எழுந்தருளியிருக்கிறார்; ஆகிலும் நான் உங்களுக்கு இப்போதே சொன்னேனாகவேணும்” என்று , எம்பெருமானாருடைய திருவடி நிலைகளையெடுத்துத் தம் திருமுடியின்மீது வைத்துக் கொண்டு,
“இப்போது உடையவர் எனக்கு அருளிச்செய்தார். சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று,
“அந்தணர்தம் அமுதத்தினைப் பாடவல்லார் சாயைப்போல அணுக்கர்கள்” என அவ்வயித்துப் பொருள் கொள்ளுங்கள்’ என்றருளிச் செய்தனராம்.
அதாவது “தம்முடைய நிழல் தம்மை விட்டு அகலாதவாறு போல, எம்பெருமானைப் பாடுமவர்கள் அவ்வெம் பெருமானைவிட்டு இறையும் அகலாது அவன்றனக்கே அந்தாணிச் சேவகராப் பெறுபவர்” என எம்பார் அர்த்தம் ஸாதித்தருளினாராம்.
ராமானுஜ பதச்சாயையார் (நிழல்) என்றும் அழைக்கப்படும்
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்
