அலைபாயுதே… கண்ணா, என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே… கண்ணா,
என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே… கண்ணா…
நிலைபெயராது சிலைபோலவே நின்று…
நிலைபெயராது சிலைபோலவே நின்று,
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம்
அலைபாயுதே… கண்ணா…
Thiruvallur Sri Veera Raghava Perumal Venu Gopalan Thirukkolam.