(திருப்பாவை – 1 )
1 . நந்தகோபன் குமரன்
2 . யசோதை இளஞ்சிங்கம்
3 . கார்மேனியன்
4 . செங்கண்(ணன்)
5 . கதிர் மதிய முகத்தான்
6 . நாராயணன்
(திருப்பாவை – 2 )
7 . பாற்கடலில் பையத் துயின்றோன்
8 . பரமன்
(திருப்பாவை – 3 )
9 . ஓங்கி உலகளந்தோன்
10 . உத்தமன்
(திருப்பாவை – 4 )
11 . ஆழி மழைக் கண்ணன்
12 . ஊழி முதல்வன்
13 . பாழியந் தோளுடையோன்
14 . பற்பநாபன் (பத்மநாபன்)
(திருப்பாவை – 5 )
15 . மாயன்
16 . வடமதுரை மைந்தன்
17 . யமுனைத் துறைவன்
18 . ஆயர் குலத்தோன்
19 . அணி விளக்கு
20. தாயைக் குடல் விளக்கம் செய்தோன்
21 . தாமோதரன்
22. போய பிழையும் புகு தருவான்
(திருப்பாவை – 6 )
21 . புள்ளரையன்
22 . பேய் முலை நஞ்சுண்டான்
23 . கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சியவன்
24 . வெள்ளத்தரவில் துயில் அமர்ந்தோன்
25 . வித்து
(திருப்பாவை – 7 )
26 . நாராயணன் மூர்த்தி
27 . கேசவன்
(திருப்பாவை – 8 )
28 . மாவாய் பிளந்தான்
29 . மல்லரை மாட்டியோன்
30 . தேவாதி தேவன்
(திருப்பாவை – 9 )
31 . மா மாயன்
32 . மாதவன்
33 . வைகுந்தன்
34 . நாமம் பல உடையோன்
(திருப்பாவை – 10 )
35 . நாற்றத் துழாய் முடியன்
36 . நாராயணன்
37 . போற்ற பறை தருவான்
38 . புண்ணியன்
(திருப்பாவை – 11 )
39 . குற்றம் ஒன்று இல்லாதவன்
40 . கோவலன்
41 . முகில் வண்ணன்
(திருப்பாவை – 12 )
43 . தென்னிலங்கைக் கோமானைச் செற்றவன்
44 . மனதுக்கினியான்
(திருப்பாவை – 13 )
45 . புள்ளின் வாய் கீண்டான்
46 . பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்
(திருப்பாவை – 14 )
47 . சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
48 . பங்கயக் கண்ணான்
(திருப்பாவை – 15 )
49 . வல் ஆனை கொன்றான்
50 . மாற்றாரை மாற்றழிக்க வல்லான்
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்