திருப்பாவை பாசுரம் 23 மாரி மலை முழைஞ்சில் 2


🌸 திருப்பாவை பாசுரம் 23 ‘மாரி மலை முழைஞ்சில்’

“நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்!”

🎵பாசுரம் 🎵

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா!

உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி,

கோப்பு உடைய சீரிய சிங்காசனத்து இருந்து,

யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

📖 பாசுர விளக்கம் 📖

மழைக் காலத்தில் மலைக்குகையில் படுத்துத் தூங்கும் வீரமுள்ள சிங்கம், தூக்கம் தெளிந்து எழும்பொழுது நெருப்புப் போல சிவந்த கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்த்து,

உடம்பை நாலு பக்கமும் அசைத்துச் சோம்பல் முறித்துக் கர்ஜனை செய்து வெளியில் வருவது போல காயம்பூ போன்ற நீல நிறமுடையவனே!

நீ உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து அழகிய சிங்காசனத்தில் அமர்ந்து, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்.

🌹 Thiruppavai Pasuram 23 🌹

Just as the fierce lion crouching in sleep inside a mountain-den during rains on becoming awake, open its fire-emitting eyes, raising its mane and shaking all over, comes out with loud roar and steps out majestic way, even so, may you the lord of enchanting bluish hue as that of the kaya-flower emerge from your holy shrine and come out, blessing us by your gait and be seated on the perfectly suited and well deserving throne and then you may inquire us the purpose of our visit and grace us.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

2 thoughts on “திருப்பாவை பாசுரம் 23 மாரி மலை முழைஞ்சில்