திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா


🔶 திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா

#கோதை_தமிழ்மாலை – கூடியிருந்து குளிர் மாலை

“நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்”

🎵 பாசுரம் 🎵

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உந்தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்;

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,

பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;

ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

📖 பாசுர விளக்கம் 📖

பகைவர்களை வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா உன்னைப்

பாடிப் பயனைடந்து நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில்

அனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை, தோடு, மாட்டல், காலணி என்று பலவகை ஆபரணங்கள், ஆடைகள் நாங்கள் அணிவோம்.

அதன் பின்னே முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்.


🔶 Thiruppavai Pasuram 27 – Meaning

O Govinda who brings disparate hearts together!

See what fortunes we have gained by singing your praise everywhere

Jewels of world-fame-sudakam-bangles; Tolvalai-amulets, todu-ear-rings;

Sevippoo – ear-tops, patakam-anklets and many other that we delight in wearing; clothes and finery then sweet milk-food served with ghee that flows down the elbow: together we shall sit and enjoy these in peace.

கோ(விந்)தா – ‘கோதா கோவிந்தனாக திருக்கோலம்’ – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்

🌸 ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 🌸

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *