திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
#கோதை_தமிழ்மாலை – கூடியிருந்து குளிர் மாலை
“நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்”
பாசுரம்
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,
பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்
பகைவர்களை வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா உன்னைப்
பாடிப் பயனைடந்து நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில்
அனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை, தோடு, மாட்டல், காலணி என்று பலவகை ஆபரணங்கள், ஆடைகள் நாங்கள் அணிவோம்.
அதன் பின்னே முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்.

Thiruppavai Pasuram 27 – Meaning
O Govinda who brings disparate hearts together!
See what fortunes we have gained by singing your praise everywhere
Jewels of world-fame-sudakam-bangles; Tolvalai-amulets, todu-ear-rings;
Sevippoo – ear-tops, patakam-anklets and many other that we delight in wearing; clothes and finery then sweet milk-food served with ghee that flows down the elbow: together we shall sit and enjoy these in peace.
கோ(விந்)தா – ‘கோதா கோவிந்தனாக திருக்கோலம்’ – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்