திருப்பாவை பாசுரம் 26 மாலே மணிவண்ணா


🌷 திருப்பாவை பாசுரம் 26 மாலே மணிவண்ணா 🌷

#கோதை_தமிழ்மாலை – ‘ஆலினிலையான் மாலை’

“மார்கழி நீராட, தேவையான பொருள்களை அளிப்பாயாக!”

🎵 பாசுரம் 🎵

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.

🌷 பாசுர விளக்கம் 🌷

திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு

பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில்

உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்சசன்னியம்

போன்ற சங்குகளும், மிகப் பெரிய பறைகளும்,

பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும்,

கொடிகளும், அவற்றிற்கு மேல் கட்டவேண்டிய

சீலைகளும் வேண்டும்.

ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே, இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும்.


🌷 Thiruppavai Pasuram 26 – Male Manivanna – Meaning 🌷

Gem hued lord who slept as a child on a fig leaf during pralaya, the great deluge. We have performed the Margazhi rites as our elders decreed. Now hear what we want: conch like milk-white panchajanya which reverberates through all creation with its booming sound, a big wide drum, and singers who sing pallandu, a bright lamp festoons and flags. O lord grant us these!

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *