“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே!?”
?? பாசுரம் ??
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
?? பாசுர விளக்கம் ??
நோன்பு நோற்றுச் சுவர்க்க உலகம் புகுவேன் என்று சொன்னவளே! வாசல் கதவைத் தான் திறக்கவில்லை; பதிலாவது சொல்லக் கூடாதா?
நறுமணம் மிகுந்த துளசியை திருமுடியில் சூடிய நாராயணன் நம்மால் போற்றப்பட்டு நாம் வேண்டியதெல்லாம் தருவான். அந்த புண்ணியனால் முன்பு ஒரு நாள் எமனின் வாயில் விழுந்த கும்பகர்ணன் தான் உன்னிடம் தோற்று அவனது பெரும் தூக்கத்தை உனக்குத் தந்தானோ?
அளவிடமுடியாத பெரும் தூக்கத்தை உடையவளே! அழகிய கும்பத்தைப் போன்ற அழகுடையவளே! உறக்கம் தெளிந்து வந்து கதவை திறப்பாய்!
?? Thiruppavai Pasuram 10 ??
Oh cousin! Entering high heaven through vows, will you not answer, nor open the doors? In the days of Yore, the demon king Kumbhakarna fell into the jaws of death through our blessed boon giver, Narayana, who wears the fragrant Tulasi on his crown. But did the demon then transfer his sleep to you? O Rare gem of immense stupour!
Come quickly, open the door!
? ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்! ?