திருப்பாவை – பாசுரம் 2 – வையத்து வாழ்வீர்காள்!
நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்:
பாசுரம்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.
திருப்பாவை – பாசுரம் 2 – Audio Song – click play to LISTEN
விளக்கவுரை
பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு
செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்!
பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம்
நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம்.
விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது.
செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம்.
தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம் என்று இவ்வாறெல்லாம் எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.
Thiruppavai – Pasuram 2
O people of the world, hear what austerities we undertake during the pavai-nonbu.
Singing the praise of the Ocean reclining lord.
We will abstain from milk and ghee and bathe before dawn.
We shall not line our eyes with collyrium, nor adorn our hair with flowers.
Refraining from forbidden acts, avoiding evil tales about others, we give alms and charity in full measure and pray for the elavation of spirit. Let us rejoice.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!