திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள் 7


முதலில் திருப்பாவை தனியன் ஸேவிக்கணும். Go to திருப்பாவை தனியன்

திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள் மதி நிறைந்த . .
நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்:

பாசுரம்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்!
பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்!

திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள் – Audio Song – Click Play to LISTEN

விளக்கவுரை

மார்கழி மாதம் பெளர்ணமி நாள் இது. குளிக்க வர விரும்புகின்றவர்களே! ஆபரணங்களை அணிந்தவர்களே!
செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள்.
கூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குத் கொடியவனான,
நந்தகோபனின் பிள்ளை, அழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி,
மேகம் போல திருமேனி, சிவந்த கண், சூரியசந்திரனை போல முகம் கொண்ட
நாராயணன் நாம் விரும்பியதை கொடுப்பான்;
உலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.


Thiruppavai – Pasuram 1 – Meaning

In the Month of Margazhi of auspicious full-moon day, bejeweled girls who would join us for the bath! Come along prosperous young girls of Ayarppadi.
Narayana is the son of Nandagopa renowned for his sharp spear and fierce deeds ( towards enemies). He is the darling-child, lion-cub of beautiful-eyed Yosada. our dark-hued, lotus-eyed, radiant moon-faced Narayana alone will grant us our boons. Girls come assemble for the paavai nonbu and win the world’s praise.

Thiruppavai

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

7 thoughts on “திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள்