திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு


திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு

கண்ணனை – தாமோதரனை மலர் தூவி, அவன் நாமங்களை சொல்லி, பாடி துதிப்போம்:

 பாசுரம்   – To READ

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாசுரம் 5 – Click play To LISTEN

 விளக்கவுரை
மாயச் செயலுடைய கண்ணன் வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை
தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை
இடையர் குலத்தில் விளக்கை போல் அவதரித்து
யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை
பரிசுத்தத்துடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி
வாயாரப் பாடி, நெஞ்சார தியானிப்போம்.
முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும் அவன் அருளால்
நெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும். ஆகவே பகவான் நாமங்களைச் சொல்லி, பாடி போற்றுவோம்!

வடமதுரை மைந்தன்


 Thiruppavai – Pasuram 5 Meaning
Kirshna, prince of Northern Mathura
who haunts the clean banks of Yamana
who took birth like a beacon among the cowherd clan the jewel of his mother’s womb
if we come pure and strew fresh flowers
with songs on our lips, feeling in our hearts
then our Dhamodharan will forgive our past misdeeds and even what remains will disappear like cotton unto fire, So come, let us pronounce krishna’s namam!

sri-andal-13
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *