ஸ்ரீமதே இராமாநுஜாய நம:
பெரிய பெருமாள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரேவதி (சித்திரை மாதம்)
திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரானடிகள் வாழியே