Emperuman Kalyana Gunangal


Thrivikrama Avathara Thirukkolam
கோவிந்தன் குணம் பாடி – கோதை தமிழில் கோவிந்தனின் குணங்கள் – பதிவு 4 லக்ஷ்மிபதியான எம்பெருமான், அனைத்து நற்குணங்களுக்கும் ஒரே இருப்பிடமாய், எல்லாக் கெட்ட குணங்களுக்கும் விரோதியாய், தேசம், காலம், வஸ்து இவைகளால் அளவில்லா ஜ்ஞானமும் ஆனந்தமுமான ஸ்வரூபத்தை உடையவன். ஸமஸ்த்த கல்யாண குணங்களுக்கு பரிபூரணனாக இருப்பவன் ஸ்ரீமந்நாராயணன். கோலச்சுரிசங்கு ஆகிய பாஞ்ச ஜன்யத்தை நோக்கி, மாயன் கண்ணபிரானுடைய சிவந்த திருஅதரத்தின் அதிசய குணத்தைச் சொல்லுமாறு கேட்கும் தன்மையுடையவள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார். ‘தேசமுன்னளந்தவன் திரிவிக்கிரமன்” என நாச்சியார் திருமொழியில் அருளிச்செய்தாள் ஸ்ரீ […]

கோவிந்தன் குணம் பாடி – திரிவிக்ரமன்


Sri Andal Rangamannar
கோவிந்தன் குணம் பாடி – கோதை தமிழில் கோவிந்தனின் குணங்கள் – பதிவு 3 “மாலே மணிவண்ணா.. ” என்ற இந்த பாசுரத்தில் ஸ்ரீ ஆண்டாள் காண்பிப்பது எம்பெருமானின் மூன்று கல்யாண குணங்கள். 1) மாலே – சௌலப்யம்.2) மணிவண்ணா – சௌந்தர்யம்3) ஆலின் இலையாய் – பரத்வம். மால் என்றால் திருமால். ‘மால்’ என்பதற்கு “மாலெனக் கருமை, பெருமை மையலுமாம்” என்று மூன்று விஷயங்களை நம் பூர்வார்சார்யர்கள் அருளிச்செய்வர். 1) மால் = மையல் கொண்டவன், அன்பே வடிவானவன்.ஆஸ்ரித வியாமோஹன். அதாவது ஆஸ்ரிதர்களுக்கு அதீத […]

கோவிந்தன் குணம் பாடி – மணிவண்ணன்


கோவிந்தன் குணம் பாடி – கோதை தமிழில் கோவிந்தனின் குணங்கள் – பதிவு 2 இராமபிரான் இராவணனோடு போர்புரியும் போது அவன் மிகவும் எளிவரவு பட்டமையைக் கண்டு இரக்கமுற்று, “நிசாசரர் கோமானே! போரில் மிகவும் வருத்தமுற்றாய்; ஆதலால் இருப்பிடஞ்சென்று சிறிது தேற்றமடைந்து இன்று போய் நாளை வா” என்று நியமநம் தந்து தானே போகவிட்டு அருளினமை முதலிய பல குணங்களை உடையவன் ஸ்ரீ இராமபிரான். மனத்துக்கு இனியான்ராமபிரானின் எண்ணற்ற கல்யாண குணங்களில் ‘வாத்ஸல்ய’ குணம் மிகவும் சிறப்பானது. ஒருவன் *குன்றனைய குற்றம்* செய்து, அதவாது மலைபோல […]

கோவிந்தன் குணம் பாடி – மனத்துக்கு இனியான்


Damodharan
கோவிந்தன் குணம் பாடி – கோதை தமிழில் கோவிந்தனின் குணங்கள் – பதிவு 1 எம்பெருமானின் கல்யாண குணங்கள் எண்ணில் அடங்காதவை. “எண்ணின் மீதியன் எம்பெருமான்“- அதாவது எண்ணிறந்த திருக்குணங்களையுடையவன் என்றும், “ஈறில வண்புகழ் நாரணன்” அதாவது முடிவில்லாத திருக்கல்யாண குணங்களையுடையவன் என்றும் எம்பெருமானின் கல்யாண குணங்களைபற்றி மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில் சாதிக்கிறார். கோதை நாச்சியாரும் “என் கோவிந்தன் குணம் பாடி அளியத்த மேகங்காள் ஆவி காத்திருப்பேனே” என நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள். “அனந்த சௌலப்ய பூம்னா” – அதாவது […]

கோவிந்தன் குணம் பாடி – தாமோதரன்