ஆரே துயர் உழந்தார்



🎵 “ஆரே துயர் உழந்தார்?

துன்புற்றார் ஆண்டையார்?

காரேமலிந்த கருங்கடலை

நேரே கடைந்தானைக் காரணனை

நீர்அணை மேல்

பள்ளி அடைந்தானை நாளும் அடைந்து”

ஸ்ரீ பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி பாசுரம் 27

☘ பாசுர விளக்கம்:

“எம்பெருமானை ஆச்ரயிக்கப்பெற்றவர்களில் ஆரேனும் துன்பப்படுவாருண்டோ? ஒருவருமில்லை. எத்தனை கொடிய பாவங்கள் செய்தவர்களாயிருந்தாலும் அப்பாவங்களின் பலனான துன்பங்களை பகவத் பக்தர்கள் அனுபவிக்க மாட்டார்கள். ‘மாயனை வாயினால்பாடி மனத்தினால் சிந்திக்க, போயபிழைப்பும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்’ என்பது போல.

சிலர் மேலெழுந்தவாரியாக வந்து அடிபணிந்தாலும் அவர்களுக்காகத் தன்னுடம்பு நோவக் காரியம் செய்யுமவனன்றோ எம்பெருமான், அப்படிப்பட்டவனே யடைந்து துக்கப்படுவாருண்டோ?

ஆர்த்தியோடே வந்து சேர்த்து நம்மைக் கூவுவாருண்டோவென்று கடலில் துயிலும் பெருமானையடைந்து துக்கப்படுவாருண்டோ? ஒருவருமில்லை”

🙏 அத்திவரதரை ஆச்ரயிக்கப் பெற்றபின் துன்பப்படுவார் யாரேனும் உண்டோ? ஒருவருமில்லை! 🙏

🌹 Divya Prabhandam Moonram thiruvantaathi Pasuram 27 Meaning:

“English Translation

If the joy-bereft world would only offer worship everyday to the Lord who churned the ocean, who is the cause of all and who reclines in the ocean, then who can ever suffer misery? Who in this wide world can?”

🙏 ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்!

🙏 ஸ்ரீ அத்திவரதர் திருவடிகளே சரணம்!

அனந்தசரஸ் நீர் அணைமேல் பள்ளி அடைந்த ஸ்ரீ அத்திவரதரும் – நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைக்கும் ஸ்ரீ பேயாழ்வாரும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *