Kannan Songs

Songs, Slokams about Krishna


கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்! வேகமாய் வாராய், திருமுகம் தாராய்! கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்! காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்! நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்! கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்! இடுப்பிலே ஒட்டியானம், விரல்களில் மோதிரங்கள் கழுத்திலே தவழ்ந்திடும் வைஜயந்தி வனமாலை! கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்! காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும் பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்! வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா […]

கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்!



அழைக்கிறான் மாதவன்! ஆநிரை மேய்த்தவன்! மணி முடியும், மயில் இறகும், எதிர் வரவும், துதி புரிந்தேன்! மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்! காதில் நான் கேட்டது – வேணு கானாம்ருதம்! கண்ணில் நான் கண்டது – கண்ணன் பிருந்தாவனம்!

அழைக்கிறான் மாதவன்!


வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா ரமணா! சசிவதனா சரஸிஜநயனா ஜகன்மோஹன ராதா ரமணா!

வனமாலி வாசுதேவ



அலைபாயுதே… கண்ணா, என் மனம் அலைபாயுதே ஆனந்த மோகன வேணுகானம் அதில் அலைபாயுதே… கண்ணா, என் மனம் அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில் அலைபாயுதே… கண்ணா… நிலைபெயராது சிலைபோலவே நின்று… நிலைபெயராது சிலைபோலவே நின்று, நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம் அலைபாயுதே… கண்ணா… Thiruvallur Sri Veera Raghava Perumal Venu Gopalan Thirukkolam.

அலைபாயுதே கண்ணா


அலைபாயுதே கண்ணா……கண்ணா.. தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே


சின்னக் கண்ணன் அழைக்கிறான்! ராதையை, பூங் கோதையை, அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச் சின்னக் கண்ணன் அழைக்கிறான்!..

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!


ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ! அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ!

ஆயர்பாடி மாளிகையில்




“க்ருஷ்னேன் ஆராத்ய த இதி ராதா க்ருஷ்ணம் ஸமாராதயதி இதி ராதிகா’ கிருஷ்ணன் மனம் உருகும் உருவம் ராதா! கிருஷ்ணன் கரும்பு என்றால் ராதை இனிப்பு. கிருஷ்ணன் தீபமென்றால் ராதை ஒளி. கிருஷ்ணன் சந்தனமென்றால் ராதை குளிர்ச்சி. கிருஷ்ணன் மலரென்றால் ராதை மணம். ராதா சமேதா கிருஷ்ணா நந்த குமார நவநீத சோரா பிருந்தா வன கோவிந்த முராரே!

ராதா சமேதா கிருஷ்ணா


பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! நின்தன் பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!

நின்தன் பச்சை நிறம்


கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை! தின்னப் பழங்கொண்டு தருவான், பாதிதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்! என்னப்பன் என்னையன் என்றால்-அதனைஎச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்! கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை! புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்; கள்ளால் மயங்குவது போலே – அதைக் கண்மூடி வாய்திறந்தே கேட் டிருப்போம்! தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை! கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை! அழகுள்ள மலர்கொண்டு வந்தே, என்னைஅழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்” […]

தீராத விளையாட்டுப் பிள்ளை



“காயும் நீர்புக்கு கடம்பேறி காளியன் தீயபணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்” பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து – 2.1.3

ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்!



அசைந்தாடும் மயில் ஒன்று காணும் – நம்அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்!

அசைந்தாடும் மயில்


ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணாமதுராபுரி ஸதனா ம்ருது வதனா மதுசூதனா இஹ…. ஸ்வாகதம் கிருஷ்ணாசரணாகதம் கிருஷ்ணா -(பல்லவி) போகதாப்த ஸுலபா ஸுபுஷ்ப கந்த களபாகஸ்த்தூரி திலக மஹிபா மம காந்த நந்த கோப கந்த.. ஸ்வாகதம் கிருஷ்ணாசரணாகதம் கிருஷ்ணா – (அனுபல்லவி) முஷ்டிகாசூர சாணுர மல்லமல்ல விசாரத குவலாயபீடமர்த்தன களிங்க நர்த்தனகோகுலரக்ஷ்ண ஸகல ஸுலக்ஷ்ண தேவஸிஷ்ட ஜன பால ஸ்ங்கல்ப கல்பகல்ப ஸதகோடி அஸமபராபவதீர முனி ஜன விஹார மதனஸூகுமார தைத்ய ஸ்ம்ஹாரதேவமதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸவ்ரதயுவதி ஜன மானஸ பூஜித – […]

ஸ்வாகதம் கிருஷ்ணா



ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ!

ஆயர்பாடி மாளிகையில்



கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென தரமான குழலிசை கேளும் – போன ஆவி எல்லாம் கூட மீளும்! கண்ணன் வருகின்ற நேரம்… சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் – தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் – நல்ல துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் – புகழ் சொல்லிச் சொல்லி இசைபாடும்! கண்ணன் வருகின்ற நேரம்… கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை – என்று கண்டதும் […]

கண்ணன் வருகின்ற நேரம்




கவலைப்படும் கண்ணனைப் பற்றிய கவிதை அடுத்து யார் இல்லம் நுழைவதென்று−ஐயா, எனக்கொன்னும் புரியலயே;எடுத்து வெண்ணையை உண்பதற்கே−எனக்கோ, ஆசை கொறயலயே! பக்கத்துவீட்டு பாலாவோ−பானையை பதுக்கி வெச்சிருக்கா;பத்துப் பூட்டு போட்டு அதன்−சாவியை தலைப்பில முடிஞ்சிருக்கா! எதிர் வீட்டு இளவரசி−எரவாணத்தில், மறச்சு ஒளிச்சிருக்கா;ஏனோ அதுக்குக் காவலென்று−அதுக்குக் கீழயே படுத்திருக்கா! கோடியாத்து கோபாலி−குழியில பானைய எறக்கிருக்கா;குழிக்கு காவலா கணவனையே,கழியோட ஒக்காரச் சொல்லிருக்கா! நாலாம் ஆத்து நந்தாவோ−வேலியே போட்டு மூடிருக்கா;நானும் அங்க போனாக்க−தோல உறிச்சே போட்டுடுவா! இப்படியெல்லாம் செஞ்சாக்க−நான்எப்படி இங்க இருக்கறதாம்?முப்படி வெண்ணை தினம் வேணும்−இனிஎப்படி காலம் தள்ளறதாம்? பச்சை பிள்ளை […]

என் கவலை எனக்கு…


4
 வாரணமாயிரம் சூழவலஞ்செய்து * நாரண நம்பி நடக்கின்றானென்றுஎதிர் * பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் * தோரணம் நாட்ட கனாக்கண்டேன் தோழீ! நான். 1  நாளை வதுவை மணமென்று நாளிட்டு * பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ் * கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர் * காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான். 2  இந்திரனுள்ளிட்ட தேவர்குழாம்எல்லாம் * வந்திருந்துஎன்னை மகட்பேசி மந்திரித்து * மந்திரக் கோடியுடுத்தி மணமாலை * அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 3  நால்திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி * […]

வாரணமாயிரம் பாடல் (Video – duration 5 mins)


During the special month of Karthika, devotees around the world sing this Damodarastakam every day. Each verse describes various exceptional qualities or features of Krishna. In this year – 2015, Karthika month starts on October 27th and ends on November 25th. Chant Damodarastakam Kindly refer Damodarastakam slokam lyrics below given in Tamil as well as English.   ॥ ஸ்ரீ தாமோதராஷ்டகம் ॥ நமாமீஸ்²வரம் […]

Damodarastakam


கிருஷ்ண பகவான் எங்கும் எதிலும் இருப்பவன் என்ற தத்துவத்தை முதலில் உணர்ந்தவர்கள், பகவான் மேல் எளிமையான பக்தி கொண்டிருந்த கோபிகைகளும், கோபாலர்களும் தான். எனவே தான் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் தெரிந்தான். பார்க்கும் பொருள் எல்லாவற்றிலும் இருப்பவன் அவனே என்ற தத்துவம். காணாமல் போன கோபாலர்களுக்காக அவர்கள் வடிவில் ஒவ்வொரு வீட்டிற்கும் கிருஷ்ணனே சென்றான். இது, எல்லாம் அவன் வடிவமே என்ற அரும் பொருள். இந்த இரண்டும் அவர்களுக்கு அல்லவா கிடைத்தது. அதனால்தான் சுகபிரம்ம ரிஷி, பாகவதத்தில் வரும் கோபிகைகளின் கீதத்தினை மிகமிக […]

Gopika Geetham



கோவிந்த க்ருஷ்ண ஜெய் கோபால க்ருஷ்ண ஜெய் கோபால பால பால ராதா க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் கோவிந்த க்ருஷ்ண ஜெய் கோபால க்ருஷ்ண ஜெய் கோபால பால பால ராதா க்ருஷ்ண ஜெய் கோபிகமால ஹாரிப்யாரி மாயி மீர மனவிஹாரி மதன மோஹன முரளிதாரி க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் ராமா க்ருஷ்ண […]

கோவிந்த கிருஷ்ண ஜெய், கோபால க்ருஷ்ண ஜெய்


5
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ? நந்தகுமாரன் விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ? பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ? அனைவரும் கூடி அவன் புகழ் பாடி நிர்மல யமுனா நதியினில் ஆடி மனம் வனம் திரிந்து வரதனை தேடி அனுதினம் அமுதனை தரிசனம் செய்த அந்த நாளும் வந்திடாதோ? மானினம் நாணிடும் மங்கையரோடு மாதவர் தோறும் மயங்கிடுமாறு தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி …. தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி மானிடர் தேவரின் மேல் எனச்செய்தார் அந்த நாளும் […]

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ